Sunday, 16 December 2018

Al quran

https://app.box.com/s/rzpxys1ilrmp8zb5ws1iqzjmqg041bp8

Al quran

அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானதா ?  மௌலித் ஓதுவது சிறப்பானதா  ?
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)-
அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதை பின் வரும் ஹதீத் தெளிவுபடு த்துகிறது.
سنن الترمذي
2910 -  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ القُرَظِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ - 2910)
இதுபோல் பல ஹதீத்கள் அல் குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றி குறிப்பிடுகின்றன.

அதற்காக எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் சிறப்பு என்று நினைத்துக் கொண்டு குர்ஆனையே எப்போதும் ஓதிக் கொண்டு இருந்து விட்டால்
அல்குர்ஆனில் கூறப்பட்ட கட்டளைகளை செய்வது எப்போது?

அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக தொழாமல் அல் குர்ஆனை மட்டும் ஒதிக் கொண்டிருக்க முடியாது.

அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக ஹஜ் செய்யாமல் அல் குர்ஆனை மட்டும் ஒதிக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்றுதான் ஏனைய விடயங்களும்.

இதுபோல் தஸ்பீஹ் ஓது வதன் சிறப்புக்கள் பற்றி  ஹதீத்களில் அதிகம் காணப்பகின்றன.

صحيح البخاري
6405 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ "
  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறினார்கள்.
'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!  என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி -6405
எனவே அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' என்று தஸ்பீஹ் செய்யாமல் இருக்க முடியாது 

அல்குர்ஆனின் கட்டளைப்படி நடப்பது பற்றி பின் வரும் ஹதீத் தெளிவுபடு த்துகிறது.

سنن أبي داود (2/ 70)
1453 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَبَّانِ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ، أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ، ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا؟»

அல்குர்ஆனை ஓதி அதன் படி நடப்பவரின் (அதன் கட்டளைகளை எடுத்து நடந்து அதன் விலக்கல்களை  தவிர்ந்து நடப்பவர்) பெற்றோருக்கு மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படும் அதன் ஒளி சூரியனின் ஒளியை விட அழகானது. அவ்வாறாயின் அல்குர்ஆனை ஓதி அதன் படி நடப்பவரின் நிலை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறினார்கள்.
ஆதாரம் : அபூதாவூத் – 1453

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.

{إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا} [الأحزاب: 56]

33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான். மலக்குகளும் ஸலவாத்து சொல்கின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல் அஹ்ஸாப்:56)
ஸலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சொல்லுங்கள் என்பது  அல்லாஹ்  கட்டளை.
எனவே மௌலித் ஓதுவதன் மூலம் அதிகம் ஸலவாத்சொல்வோம்
மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது
மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன.
மேலும் அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ} [يونس: 58]
10:58. “அல்லாஹ்வின் அருட்கொடைக்காகவும், அவனுடைய பெருங்கிருபைக்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.(யூனூஸ்:58)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் றஹ்மதுன் லில் ஆலமீன் – அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடை. அந்த அருட்கொடைக்காக மகிழ்ச்சியடையுமாறு அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
இத்திருவசனத்தின் அடிப்படையில் றபீஉல் அவ்வல் மாதத்தில் ஸுப்ஹான
மெளலித் ஓதி ஸலவாத்துசொல்லி அன்னதானம் – ஸதகா வழங்கி  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ற அருட்கொடைக்காக மகிழ்ச்சியடைகின்றோம்.

மேலும் அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.
{وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11]

93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) சொல்லிக்காட்டுங்கள்.  (அல் ழுஹா 11)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை. அந்த அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) சொல்லிக்காட்டுங்கள் என அல்லாஹ் தஆலா கூறுகிறான்.

அந்த அடிப்படையில் இந்த வசனத்தின் படி ரபீஉல்அவ்வல் மாதத்தில் ஸுப்ஹான மெளலித் ஓதி கவி மூலமும் பயான்கள் மூலமும்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ற அருட்கொடையைப் பற்றி  மக்கள் மத்தியில் எடுத்து சொல்கின்றோம்.

எனவே அல்குர்ஆன் ஓதுவது எவ்வாறு சிறப்பானதோ அதுபோல் ஸலவாத் சொல்லுவதும் சிறப்பானது தான். அதுவும் இறை கட்டளைக்கு அடி பணிவது தான் .
அந்த ஸலவாத் மௌலித் என்ற பெயரில் நடை பெற்றாலும் அது சிறப்பானது தான் என்பதில் சந்தேகமில்லை 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது புகழ்பாடுவதும் அவர்களுக்காக மகிழ்ச்சியடைவதும்  அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிவது தான் என்பதிலும் சந்தேகமில்லை.