وكان الشيخ أبو يَزيدَ البِسطامي يقول لِعلماءِ زمانِه أخذتُم علمَكم ميِّتا عن ميّتٍ، وأخذنا علومنا عن الحيّ الذي لا يموت،
அஷ்ஷெய்கு அபூயஸீத் அல் பிஸ்தாமீ (றஹ்) அவர்கள் தங்களின் காலத்து உலமாக்களுக்கு, ( நீங்கள் உங்களின் அறிவை “மையித்” மூலம் பெற்றீர்கள். ஆனால் நாங்களோ எங்களின் அறிவுகளை மரணிக்காத உயிருள்ளவரிடமிருந்து பெற்றோம்) என்றார்கள்.
وكان الشيخ أبو مدين إذا سمع أحدًا من أصحابه يقول في حكايةٍ اَخبَرنِي بها فلانُ بنُ فلانٍ يقول لا تُطْعمونا القديدَ، يُريد بذلك رفْعَ همَّةِ أصحابه، يعني لاتحدِّثُوا الّا بفُتُوحِكُم الجدِيدِ الّذي فتح الله تعالى به على قلوبكم في كلام الله تعالى أو كلام رسوله صلى الله عليه وسلّم، فإنَّ الواهِبَ للعلم الإلٓهيّ حيٌّ لا يموت، وليس له مَحَلٌّ في كُلِّ عصر إلّا قلوب الرِّجال.
அஷ்ஷெய்கு அபூமதன் (றஹ்) அவர்களின் சிஷ்யர்களில் யாராவது ஒரு செய்தியை - அறிவைச் சொல்லி அதை இன்னானுடைய மகன் இன்னான் சொன்னான் என்று கூறினால் “காய்ந்த இறைச்சை எங்களுக்கு உணவாக தரவேண்டாம்” என்று சொல்வார்கள். அதாவது தங்கள் சிஷ்யர்களின் முயற்சியின் உயர்வை நாடி அவ்வாறு சொல்வார்கள்.
சுருக்கம் என்னவெனில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லாமல் அல்லாஹ்வின் பேச்சிற்கும்,அவனின் திருத்தூதரின் பேச்சிற்கும் அல்லாஹ் உங்களின் உள்ளத்தில் இல்ஹாம் மூலம் வழங்கிய ஞானத்தைச் சொல்லுங்கள். ஏனெனில் இறை ஞானத்தை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குபவன் உயிருள்ளவன். அவன் மரணிப்பதில்லை. அவன் தனது ஞானத்தை வைப்பதற்கு பொருத்தமான இடமாக ஒவ்வொரு காலத்திலும் வாழ்கின்ற இறை ஞானிகளின் உள்ளங்களையே வைத்துள்ளான்.
அஷ்ஷெய்கு அபூ மத்யன் (றஹ்) அவர்கள் “இல்ஹாம்”என்ற விஷேட அறிவு வழங்கப்பட்டவர்களாவார்கள். இவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற இறை ஞான மேதை இப்னு அறபீ (றஹ்) அவர்களின் “உஸ்தாத்” ஆசானுமவார்கள்.
மேற்கண்ட இவர்களின் கூற்றின் கருத்து என்னவெனில் “கிதாப்” நூல்களில் எழுதப்பட்ட அறிவை விட அல்லாஹ்வால் அடியார்களுக்கு வழங்கப்படுகின்ற இறைஞானம்தான் சிறந்ததும், பிழையால்லாத சரியான ஞானமுமாகும்.
மேற்கண்ட இறை ஞானி அபூ யஸீத் அல்பிஸ்தாமீ (றஹ்) அவர்கள் கூறியுள்ள கருத்தும் இதே தத்துவத்தையே இயம்புகிறது.
ஆதாரம் - அல்யவாகீத்
பாகம் - 01
பக்கம் - 15