Monday, 30 January 2023

மனிதாமனிதா......

*மனிதா! அல்லாஹ் பொய் சொல்லவில்லை.*
*நீதான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை.*

*தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)*
 
மனிதா! அல்லாஹ்வின் படைப்புக்களில் நீதான் சிறந்தவன். ஆயினும் இதை நீ உணராமல் இருக்கிறாய். விளங்காமல் இருக்கிறாய். 
أَتَـزْعُمُ أَنَّكَ جِـرْمٌ صَغِـيْـرٌ 
وَفِيْكَ انْطَوَى الْعَالَمُ الْأَكْبَرُ 

 நீ சிறிய படைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? ஒரு முழம் அகலமும், நான்கு முழம் நீளமும் உள்ள ஒரு மனித கட்டையென்றா உன்னை நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன் நினைப்பு தவறானது. நீ நினைப்பவன் போன்றவனல்ல நீ. நீ பெரிய பொக்கிஷம். பரந்து விரிந்த பெருங்கடல்.
مَا ظَهَرْتُ فِى شَيْئٍ كَظُهُوْرِيْ فِى الْإِنْسَانِ

 நான் மனிதனில் வெளியானதுபோல் வேறெதிலும் வெளியாகவில்லை. இது இறைவாக்கு. பரிசுத்த வாக்கு. இது பொய்யல்ல. நீதான் இதைப் புரியாமல் உள்ளாய். 

 இறைவன் படைத்த படைப்புக்கள் யாவும் அவனின் வேறுபடாத வெளிப்பாடுகளே! படைப்புகள் அனைத்துமாக அவனேதான் வெளியாகியுள்ளான். ஆயினும் அவன் மனிதனாக வெளியாகியது போல் வேறெதுவாகவும் வெளியாகவில்லை. இதனால்தான் படைப்புகளில் மனிதன் சிறந்தவனானான். மனிதனில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே சிறந்தவரானார்கள். 
اَلْإِنْسَانُ سِرِّيْ وَأَنَا سِرُّهُ 

 மனிதன் எனது இரகசியம். நான் அவனின் இரகசியம். இதுவும் இறை வாக்குதான். اَلْإِبْنُ سِرُّ أَبِيْهِ தனயன் தந்தையின் இரகசியம். இது இறை வாக்கல்ல. இறைவனை அறிந்த மகான்களின் வாக்கு. 

 இவையாவும் சேர்த்து தருகின்ற தத்துவம் ஒன்றே ஒன்றுதான். அது பின்வருமாறு. 
 إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

 வானங்கள் மீதும், பூமியின் மீதும், மலைகள் மீதும் அமானிதத்தை நாங்கள் எடுத்துக் காட்டினோம். அவை அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. அதைப்பற்றி அவை அஞ்சின. எனினும் அதை மனிதன் சுமந்து கொண்டான். அவன் கடுமையாக அநீதி செய்பவனாகவும், கடுமையான அறிவிலியாகவும் ஆகிவிட்டான். (திருக்குர்ஆன் 33-72)

 மேலே இரகசியம் என்று கூறப்பட்டது மனிதன் சுமந்து கொண்ட அமானிதத்தையே குறிக்குமென்று ஸூபீ மகான்கள் கூறியுள்ளார்கள். 

 திருமறை வசனத்தில் வந்துள்ள “அல் அமானத்” என்ற சொல்லுக்கு “ளாஹிர்” வெளிரங்க அறிஞர்கள் அதாவது திருக்குர்ஆன் என்ற கடலில் நீருக்கு மேல் நீந்துபவர்களான அறிஞர்கள் ஒரு விளக்கமும், அக்கடலில் நீரின் உள்ளே நீந்துபவர்களான இறை ஞானிகள் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள். 

 வெளிரங்க அறிஞர்கள் கூறும் விளக்கம் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ளதை பலர் அறிவர். ஆகையால் அவர்களின் விளக்கத்தை இங்கு கூறாமல் இறைஞான மகான்கள் கூறும் கருத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். 

 வானங்களும், பூமியும் ஏற்க மறுத்து மனிதன் ஏற்றுக் கொண்ட அமானிதம் என்பது படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு பற்றிய விளக்கம் என்றும், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் என்றும் ஞான மகான்கள் கூறுகின்றனர். 

 உயிரினங்களில் மனிதனால் மட்டுமே அந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களிலும் நற்பாக்கியம் விதியாக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும். அவர்கள்தான் வலீமார்களாவர். 

 எனவே, வலீமார்கள் இது தொடர்பாக எவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள் என்று கவனிப்போம். இப்போது நான் கூறப் போகும் விளக்கம் வஹ்ஹாபிகளான வழிகேடர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கும். அவர்களிற் பலர் திறமையுள்ளவர்களாயிருந்தும் புரியாமற் போனதற்கான காரணம் “நஸீப்” என்ற விதியில்லாமையே.
اَلنَّصِيْبُ يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ جَـبَلَـيْـنِ
اَلنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ

 தலைவிதி கெட்டதாயின் இரு உதடுகளுக்கு இடையிலுள்ள விடயம் கூட நடக்காது. அது நல்லதாயிருந்தால் இரு மலைகளுக்கு இடையிலுள்ள விடயமாயினும் அது நடந்தே தீரும். 

 வஹ்ஹாபிகள் “நஸீப்” இல்லாதவர்கள். நாம் என்ன செய்யலாம். இக்காலத்திற்குத் தேவையானவர்களிற் சிலர் வஹ்ஹாபீகளாக இருப்பது எனக்கு வேதனையான விடயமே!
اللهم فقِّهْ من أحببتُه من الوهّابيّين فى أمر وحدة الوجود، وَأَرِهِ الْحَقَّ حقًّا وَارْزُقْهُ اتِّبَاعَه وأَرِهِ الْبَاطِلَ باطلا وارزقه اجْتِنَابَهُ، وعلّمه ما لم يعلم، وألهمه ما أشكل عليه، وائت به إلى فِنائنا ليذوق فَنَائَنَا، اللهم اصرف قلبه إلى كهف العارفين الواصلين، وقلّب قلبه كما قلّبت قلب عمر إلى دين الإسلام،

 இறைவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு العلاقة الذاتيّة என்று சொல்லப்படும். 

 இதை ஓர் உதாரணம் மூலம் கூறினால் இலகுவாக தெளிவு கிடைக்கும். தச்சனுக்கும், கதிரைக்கும் தொடர்பு உண்டு. கதிரைக்கும், மரத்துக்கும் தொடர்பு உண்டு. இவ்விரு வகைத் தொடர்புகளில் அல்லாஹ்வுக்கும் - படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதேயன்றி கதிரைக்கும், தச்சனுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. 

 தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு அவன் கதிரையைச் செய்து முடிக்கும் வரையுள்ள தொடர்புதானேயன்றி நிரந்தரமான தொடர்பு இல்லை. தச்சன் கதிரையை செய்து முடிக்கும் வரைதான் அவனுக்கும், கதிரைக்கும் தொடர்பு இருந்தது. இது சில மணித்தியாலத் தொடர்புதான். அதோடு இந்த வகைத் தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்று தச்சன், மற்றது கதிரை. 

 ஆயினும் கதிரைக்கும், மரத்திற்குமுள்ள தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையுமில்லை. கதிரையும், மரமும் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் இருப்பது மரம் மட்டுமேயாகும். கதிரைக்கு “ஹகீகத்” எதார்த்தமில்லை. கதிரையின் வடிவம் கலைந்தால் மரம் மட்டுமே மிஞ்சும். 

 படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு போன்றதல்ல என்றும், கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதென்றும் நான் குறிப்பிட்டதிலிருந்து படைத்தவனும், படைப்பும் பெயரளவில்தான் இரண்டு பொருட்கள் - வஸ்த்துக்களாக விளங்கப்படுகின்றனவேயன்றி எதார்த்தத்தில் இரண்டு பொருட்களே இல்லை. படைத்தவன் படைப்பின் தோற்றத்தில் உள்ளான். 

 மரமும், கதிரையும் போன்ற உதாரணங்கள் பல உள்ளன. அவற்றையும் உதாரணங்களாகக் கொண்டு சிந்திக்கலாம்.

 உதாரணமாக தங்கம், மோதிரம் போன்று. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு விட்டுப்பிரிய முடியாத தொடர்பாகும். இவ்விரண்டும் பெயரளவில்தான் இரண்டென்று விளங்கப்படுகிறதேயன்றி எதார்த்தத்தில் தங்கம் மட்டுமே உள்ளது. மோதிரத்திற்கு எதார்த்தமில்லை. எதார்த்தத்தில் மோதிரம் என்று ஒன்று இல்லவே இல்லை. எதார்த்தத்தில் இல்லாததை இருப்பதாக “அக்ல்” அறிவு சொல்வதால் மனிதன் ஏமாந்து, மருட்சியடைந்து எதார்த்தத்தில் இல்லாத பொருளை இருப்பதாக நினைத்து அதற்கு ஒரு பெயரும் சொல்லி அழைக்கிறான். இது அவனின் அறியாமையும், ஏமாற்றமுமாகும். 

 எதார்த்தத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக அறிவதும், நம்புவதும், சொல்வதும் பொய்யேதான். மெய்யல்ல. இது பொய் சொல்வதாகவே ஆகும். 

 மனிதன் பொய்யுலகில் வாழ்வதால் பொய் சொல்லாமல் வாழவே முடியாது. 

 “எல்லாம் அவனே” என்று நம்புவதும், சொல்வதும் “ஷரீஆ”வுக்கு முரணானதென்று இத்துறையில் விளக்கம் குறைந்தவர்கள் தமது அறியாமை காரணமாகக் கூறலாம். ஆயினும் அவர்கள் தமது அறியாமைத் திரைகளை அகற்றி கலப்பற்ற “நிய்யத்”தோடு செயல்பட்டார்களாயின் சத்தியத்தைப் புரிந்து கொள்வார்கள்.

 “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாக நானும், என்னுடனுள்ள மௌலவீமார்களிற் சிலரும் பறை சாற்றி வருகின்றோம். இந்த ஞானத்தை மனம் முரண்டாக எதிர்க்கும் போலி உலமாஉகளை சாடி எழுதியும், பேசியும் வருகிறோம். குறிப்பாக மௌலவீ ரிஸ்வீ அவர்களையும் சாடி எழுதியும், வருகின்றோம். 

 உலமா சபையில் இருக்கின்ற “பத்வா” குழு “தக்வா” இல்லாத “புத்வா” குழுவாகும். இந்தக் குழு தமது “புத்வா”வில் செய்துள்ள இருட்டடிப்புக்களை மக்களுக்கு புட்டுப் புட்டுக் காட்டியும் வந்துள்ளோம். வந்து கொண்டுமிருக்கிறோம். இந்த முல்லாக்கள் போல் பொறாமை கொண்ட உலமாஉகள் உலகில் எங்குமே தோன்றியிருக்கவும் மாட்டார்கள். இதன்பின் தோன்றவும் மாட்டார்கள். 

 இவர்கள் உலமாஉகளாயிருந்தும் கூட இப்படியொரு அநீதி செய்வார்களென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. 

 நான் பேசி வருகின்ற இறையியல் தத்துவம் சாதாரணமானதல்ல. பலகோடி ரூபாய்கள் செலவிட்டும், பல நாடுகளுக்குச் சென்றும், பல இறையியல் மேதைகளைச் சந்தித்தும் பெற வேண்டிய இறை ஞானமாகும். தேடியலைந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஞானமாகும். உலமாஉகளிற் சிலர் தமது அறியாமையினாலும், வேறு சிலர் பொறாமையினாலும் இந்த ஞானத்தை கால் பந்தாக்கிவிட்டார்கள்.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 

பி.பி. உவைஸ் அதனி கேரளாதமிழில்: M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி

*பிறந்த குழந்தையின் ஒரு காதில் பாங்கும் மற்றொரு காதில் இகாமத்தும் கொடுப்பது பித்அத்தா....* 

நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்கள் புண்ணிய காரியமாக செய்து வரும் அமல்தான்  பிறந்தவுடன் குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது

இது நான்கு மத்ஹபுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 
அங்கீகரிக்கப்பட்ட ஒரு 
உன்னதமான செயலாகும்.

வஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தான காரியமாக இருக்கிறது... 

பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பவர்கள் முஸ்லிம்கள் சாதாரணமாக செய்து வரும் நல்ல அமல்கள் ஒவ்வொன்றையும் பித்அத்தின் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.. 

பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கு, இகாமத் கொடுப்பதில் மார்க்கம் அங்கீகாரம் வழங்குகிறதா என்பது குறித்து பார்ப்போம்.

இமாம் திர்மிதி அபூ ராஃபியிலிருந்து  அறிவிக்கப்படும் ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்..

"பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரைப் பிரசவித்த போது நபியவர்கள் இரு குழந்தைகளின் காதில் பாங்கு கொடுப்பதை நான் கண்டேன்."

பிறகு இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸனும் மற்றும் ஸஹீஹ் என்றும் கூறுகிறார்கள்.

 1514 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَةِ.
 هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) முஸ்னதிலும் (27186), இமாம் அபூதாவூத் ஸுனனிலும் (5105), இமாம் தப்ரானி முஃஜமுல் குப்ராவிலும் (926), இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும் (4827) 
மற்றும் இமாம் பைஹக்கி (8252) 
ஷுஃபுல் ஈமானிலும் (8252)  அறிவித்துள்ளனர். .  
இன்னும் பல முஹத்திஸுகள் அவர்களின் நூல்களில் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டியுள்ளார்கள்... 

இத்தகைய ஹதீஸ்களின் வெளிச்சத்தில் தான் பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று கடந்த கால  நூற்றுக்கணக்கான  இமாம்கள் தங்களது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளனர். 

இவர்கள் ஒன்றும் பார்க்காத ளயீஃபும், பித்அத்தும் வஹாபிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது.. 

இமாம் திர்மிதியை தவிர இன்னும் கூடுதலாக, இந்த ஹதீஸை முஹத்திஸுகளான  இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும், 
இமாம் அப்துல் ஹக் அஹ்காமிலும், 
இமாம் பகவி அவர்கள் மஸாபிஹுஸ்ஸுன்னாவிலும் (3/146), இமாம் இப்னு மாலிக் ஷர்ஹுல் மஸாபிஹுலும்  (4/ 533) 
இமாம் முள்ஹிரி அல் மஃபாத்தீஹிலும்
(4/595)  இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி துஹ்ஃபத்துல் முஹ்தாஜிலும் (9/376)  பதிவு செய்துள்ளனர்.. 

இமாம் திர்மிதி மேற்கூறிய  ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அறிவித்துள்ளதை மற்று பல இமாம்கள்  தங்கள் புத்தகங்களில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*************************************************

1. الأذكار للإمام النووي (286)
2. البدر المنير للإمام ابن الملقن (9/ 348)
3. مشكاة المصابيح للإمام الخطيب الشربيني  (2/ 1209) 
4. ميزان الاعتدال للحافظ الذهبي (2/ 354)
5. ذخائر العقبى في مناقب ذوي القربى للإمام محب الدين الطبري (120)
6. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح للإمام ملا علي القاري (7/ 2691)
7. أسنى المطالب في شرح روض الطالب للإمام زكريا الأنصاري (1/ 549)
8. الغرر البهية في ش رح البهجة الوردية للإمام زكريا الأنصاري (5/ 173)
9. فتح الوهاب بشرح منهج الطلاب للإمام زكريا الأنصاري (2/ 234)
10. حدائق الأنوار ومطالع الأسرار في سيرة النبي المختار للإمام بحرق الحضرمي (508)
11. تاريخ الخميس في أحوال أنفس النفيس للإمام حسين الدِّيار بَكْري (1/ 418)
12. كفاية النبيه في شرح التنبيه للإمام الرفعة (8/ 132)
13. كنز الراغبين للإمام المحلي (4/ 257)
14. حاشية الجمل على شرح للإمام الجمل (5/ 267)
15. حاشية البجيرمي على شرح المنهج للإمام البجيرمي (4/ 303)
16. الوابل الصيب من الكلم الطيب لإبن قيم الجوزية (ص: 131)
17. مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434)
18. شرح منتهى الإرادات للإمام منصور البهوتي الحنبلي(1/ 130)
19. كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي  (1/ 234)

இந்த பழங்கால அறிஞர்கள் அனைவரும் திர்மிதி ஹஸன் என்றும் ஸஹீஹ் என்றும் சொல்லியதை அங்கீகரித்தும்,சரி வைத்தும் உள்ளனர்
இவர்கள் அத்தனை பேரையும் வெளிக் காலால் உதைத்துதான் பித்அத் ஒழிப்பு பிரசுரத்தில் இந்த செயலை பித்அத்தின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.... 

 
திர்மிதியின் ஹதீஸ் பலவீனமானதா......?

திர்மிதியின் மேற்கூறப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளரில் ஆஸிமுப்னு வாயில் என்ற ராவியை சிலர் ஜர்ஹ் செய்வதால் இந்த ஹதீஸின் ஏற்றுக்கொள்ளும் தன்மை பாதிக்கப்படாது. 

இமாம் இப்னுல் முலக்கின் கூறுகிறார்கள்:

ஆஸிமுப்னு வாயில் என்ற ஒரு அறிவிப்பாளர் இருந்த போதிலும் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று முஹத்திஸ்கள் கூறியது அநேகமாக இந்த ஹதீஸ் அவர்களுக்கு வேறு அறிவிப்புகள் மூலம் நிறுவப்பட்டிருக்கலாம்.
(அல்-பத்ருல்-முனீர் 9/348)

ஸலஃபி அறிஞரான அல்லாமா முபாரக் ஃபுரி மேலும் தெளிவுபடுத்துகிறார்கள்

ஆஸிமுப்னு வாயில் என்ற  ஒரு அறிவிப்பாளரின் ஜர்ஹ் இமாம் இப்னுஸ்-ஸுன்னி ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மூலம் அறிவித்த ரிவாயத் கொண்டு பரிகரிக்கப்பட்டுவிட்டது 
(துஹ்ஃபத்துல் அஹ்வதி 5/90).
இனி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நிலைநாட்டினால் கூட ஃபழாயிலுல் அஃமாலில் ளயீஃபான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதில் பிரச்சினை இல்லை என்பது அறிஞர் உலகில் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ள விஷயமாகும்.. 

இமாம் இப்னுல் ஸுன்னி ரிவாயத்: இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு குழந்தை பிறந்தால், அவர் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால், குழந்தையைத் தொட்டு ஜின்களின் தீவினைகள்
உயர்த்தப்படும்.

இமாம் இப்னுஸ்ஸுன்னி அமலுல்யவ்மி வல்லைலிலும் (578) இமாம் பைஹக்கி ஷுஃபுல் ஈமானிலும் (8254) 
மற்றும் பல முஹத்திஸுகள் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர். 

இமாம் உமரு இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்து இருக்கிறார்கள்.. 

ஐந்தாவது கலீஃபாவாகப் புகழ் பெற்ற மாபெரும் அறிஞரும், ஆட்சியாளரும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லடியாருமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.. 

டஜன் கணக்கான இமாம்கள் தங்கள் நூல்களில் இந்த மகத்தான காரியத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.

இமாம் இப்னு முலக்கின் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுவதை பாருங்கள்: இந்த நிகழ்வை நமது தோழர்கள் தங்கள் புத்தகங்களில் முத்தவாத்திரான வடிவில் விவரித்துள்ளனர்.

And in Al-Badder Al-Munir to Imam Ibn Al-Mullaqn (9/350): وَذكر فِيهِ عَن عَن عَن عَبد الْعَزِيز - رَحْمَة الله عَلَيْهِ - أَنه كَانَ إِذا ولد لَهُ ابْن اذنهِ فِي أُذُنهِ الْيُمْنَى وَأقَام فِي الْيُسْرَى.  واصحابنا يتواترون عَلَى نقل هَذَا عَنهُ,

நான்கு மத்ஹபுகளின் நூல்களிலும் குழந்தையின் காதில் பாங்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 *ஷாஃபி மத்ஹப்*

இமாம் நவவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்: குழந்தை பிறந்தால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாங்கு கொடுப்பது சுன்னத்தாகும். 
அபூ ராஃபியி, மற்றும் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ்கள் தான் இதற்கு ஆதாரம், 
அது மட்டுமின்றி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி பாங்கு  கொடுத்ததையும் நமது அஸ்ஹாபுகள் பதிவு செய்துள்ளனர்.

  وفي المجموع شرح المهذب (8/ 442): السُّنَّةُ أَنْ يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ عِنْدَ وِلَادَتِهِ ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى وَيَكُونُ الْأَذَانُ بِلَفْظِ أَذَانِ الصَّلَاةِ لِحَدِيثِ أَبِي رَافِعٍ الَّذِي ذَكَرَهُ الْمُصَنِّفُ قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْيُسْرَى  وَقَدْ رَوَيْنَا فِي كِتَابِ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ) وَأُمُّ الصِّبْيَانِ التَّابِعَةُ مِنْ الْجِنِّ وَنَقَلَ أَصْحَابُنَا مِثْلَ هَذَا الْحَدِيثِ عَنْ فِعْلِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللَّهُ

இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி கூறுகிறார்கள்: குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத்தான காரியமாகும். 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸன் (ரஹ்) அவர்களின் காதில் பாங்கு கொடுத்தார்கள் என்ற  ஹஸனான ஹதீஸ் தான் இதற்கு ஆதாரம்.. 
துஹ்ஃபத்துல் முஹ்தாஜ் (9/ 376)

 وفي تحفة المحتاج في شرح المنهاج للإمام ابن حجر الهيتمي (9/ 376)  (وَ) يُسَنُّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى) ثُمَّ يُقَامُ فِي الْيُسْرَى (حِينَ يُولَدُ) لِلْخَبَرِ الْحَسَنِ «أَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحُسَيْنِ حِينَ وُلِدَ »

 *ஹனபி மத்ஹப்*

 وفي الدر المختار وحاشية ابن عابدين (1/ 385): مَطْلَبٌ فِي الْمَوَاضِعِ الَّتِي يُنْدَبُ لَهَا الْأَذَانُ فِي غَيْرِ الصَّلَاةِ...وَفِي حَاشِيَةِ الْبَحْرِ الرَّمْلِيِّ: رَأَيْت فِي كُتُبِ الشَّافِعِيَّةِ أَنَّهُ قَدْ يُسَنُّ الْأَذَانُ لِغَيْرِ الصَّلَاةِ، كَمَا فِي أَذَانِ الْمَوْلُودِ، وَالْمَهْمُومِ، وَالْمَصْرُوعِ، .....أَقُولُ: وَلَا بُعْدَ فِيهِ عِنْدَنَا.  اهـ.  أَيْ لِأَنَّ مَا صَحَّ فِيهِ الْخَبَرُ بِلَا مُعَارِضٍ فَهُوَ مَذْهَبٌ لِلْمُجْتَهِدِ وَإِنْ لَمْ يُنَصَّ عَلَيْهِ، لِمَا قَدَّمْنَاهُ فِي الْخُطْبَةِ عَنْ الْحَافِظِ ابْنِ عَبْدِ الْبَرِّ وَالْعَارِفِ الشَّعْرَانِيِّ عَنْ كُلٍّ مِنْ الْأَئِمَّةِ الْأَرْبَعَةِ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي، عَلَى أَنَّهُ فِي فَضَائِلِ الْأَعْمَالِ يَجُوزُ الْعَمَلُ بِالْحَدِيثِ الضَّعِيفِ

 *மாலிகி மத்ஹப்*

 وفي مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434):  قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا: يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِ الصَّبِيِّ الْيُمْنَى، وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْأُخْرَى، وَقَدْ رَوَيْنَا فِي سُنَنِ أَبِي دَاوُد وَالتِّرْمِذِيِّ عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْت رَسُولَ اللَّه - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ» قَالَ التِّرْمِذِيُّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَيْنَا فِي كِتَابَ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
 (قُلْتُ) وَقَدْ جَرَى عَمَلُ النَّاسِ بِذَلِكَ فَلَا بَأْسَ بِالْعَمَلِ بِهِ وَاَللَّهُ َعْلَمَ

 *ஹம்பலி மத்ஹப்*

وفي كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي (3/ 28): (وَ) سُنَّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ الْيُمْنَى) ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى (حِينَ يُولَدُ، وَ) أَنْ (يُقِيمَ فِي الْيُسْرَى) لِحَدِيثِ أَبِي رَافِعٍ قَالَ «رَأَيْت رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ» رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَاهُ وَعَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ مَرْفُوعًا «مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى رُفِعَتْ عَنْهُ أُمُّ الصِّبْيَانِ» وَعَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَوْمَ وُلِدَ وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى» رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ وَقَالَ وَفِي إسْنَادِهِمَا ضَعْفٌ.

*இப்னுல்-கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்:* 
பாங்கு கொடுப்பது  சுன்னத்தான காரியமாகும்..

வஹாபிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இப்னுல் கய்யூம் அவர்கள் தனது துஹ்ஃபத்துல் மவ்தூத் என்ற நூலில் குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று ஒரு அத்தியாயம் கொடுக்கிறார்.  
இமாம் திர்மிதியின் ஹதீஸ் உட்பட 3 ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். 
பின்னர் பாங்கு கொடுப்பதின்  நன்மைகளும் விவரிக்கிறார்.. 

*சி.பி உமர் சுல்லமிக்கு இது பித்அத் இல்லை..* 

கேரள வஹாபிகளின் தலைவர் பதவி அலங்கரிகத்த சி.பி.உமர் சுல்லமி அவர்கள் நித்ய ஜீவிதத்தில் பிரார்த்தனைகள் என்ற புத்தகத்தில் "குழந்தை பிறந்தால்" என்ற அத்தியாயத்தில் எழுதுவதைப் பார்க்கவும்:
"நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பெற்றெடுத்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுப்பது போல் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்தார்கள்  (அபூதாவூத், திர்மிதி)

அஹ்லுல் சுன்னாவின் ஆரம்பகால அறிஞர்கள் மற்றும் ஆரம்பகால வஹாபிகளின் தலைவர்களால் புனிதமான செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாங்கு கொடுக்கும் செயலை பித்அத்தாக ஆக்குவதற்கு வஹாபிகள் எந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தெரியவில்லை.... 

பி.பி.  உவைஸ் அதனி கேரளா
தமிழில்: *M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி*