Tuesday, 24 December 2019
மரணிக்காத அறிவு
Tuesday, 19 November 2019
தொப்பி
Sunday, 27 October 2019
ஒடக்கத்து புதன்
Saturday, 10 August 2019
அரfபா நாள்
Saturday, 1 June 2019
மகத்தான லைலத்துல் கத்ர்இரவு
*மகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர்”*
லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களும் இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும்.
கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்….
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخر
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள்.
2016 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا سَعِيدٍ، وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ: اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا، وَقَالَ: «إِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا – أَوْ نُسِّيتُهَا – فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ فِي الوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ»، فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ المَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர் : அபூ ஸயீத்(ரலி) அவர்கள்.
2017 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
2020 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُولُ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” எனக் கூறுவார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
2021 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ القَدْرِ، فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى» تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ‘லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!” நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
2022 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ فِي العَشْرِ الأَوَاخِرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ، أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ» يَعْنِي لَيْلَةَ القَدْرِ، وَعَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ التَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ
“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
“இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
லைலதுல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களைவிட மேலானதாகும். அதாவது அந்த ஓர் இரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும். இரவு என்பது ஒரு நாளில் பாதியாக இருப்பதால் முப்பதினாயிரம் நாட்களை இரண்டாக ஆக்கி கணக்கிட்டால் அறுபதினாயிரம் இரவுகளைவிட மேலானது என்பது தெரியவருகின்றது.
இமாம் கஸ்ஸாலி றஹ் அவர்களும், மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது றமழானின் முதற் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்பதாம் இரவு என்பதாகவும், முதற்பிறை திங்கட்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்றாம் இரவு என்பதாகவும்,செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இரபத்து ஏழாம் இரவென்றும், வியாழக்கிழமையாயிருந்தால் இருபத்தைந்தாம் இரவென்றும், சனிக்கிழமையாய் இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள்.
இந்தக்கணக்குப்படி நான் பருவமடைந்த நாள் முதல் எனக்கு லைலதுல் கத்ர் தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல் ஹஸன் ஜுர்ஜானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ومنها ما قال ابن عباس ايضا ليلة القدر تسعة أحرف وهو مذكور فى هذه السورة ثلاث مرات فتكون السابعة والعشرين
லைலதுல் கத்ரைப்பற்றி கூறப்பட்டுள்ள “இன்னா அன்ஜல்னா” சூறாவில் லைலதுல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்து ஏழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தேழாம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று சிலர் கூறியுள்ளனர். மேற்படி கருத்தானது தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கருத்தாகுமென இஸ்மாயீல் ஹக்கீ றஹ் அவர்கள் தங்களின் விளக்கவுரையில் கூறிக்காட்டுகின்றார்கள்.
இவ்வாறு சில காரியங்களில் இமாம்கள் சில எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விடயங்களைக் கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.
லைலதுல் கத்ருடைய இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை அன்றைய இரவில் நட்ஷத்திரம் எரிந்து விழாது, நாய் குரைக்காது, சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும், அன்று சூரியன் உதிக்கும் போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும் மேலும் ஷைதான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளன.
லைலதுல் கத்ரு இரவில் தறாவீஹுக்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்தளவு திக்ரு, கிறாஅத்,தஸ்பீஹ், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
றமழான் மாதம் முதல் பத்தில் “அல்லாஹும்மர் ஹம்னீ “ என்று அல்லாஹ்வின் றஹ்மத்தையும்,
“அல்லாஹும்மக் பிர்லீ” என்று நடுப்பத்தில் அவனது பாவமன்னிப்பையும்,
“அல்லாஹும்மஃதிக்னீ மினன்னார்” என்று நரக விடுதலையையும் கேட்பது சுன்னத்தாகும்.
மேலும் லைலதுல் கத்ருடைய இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவதும் சுன்னத்தாகும்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»
யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்! நீ மன்னிப்பை விரும்புகின்றாய்; ஆகையால் என்னை மன்னித்தருள்வாயாக!
Thursday, 7 March 2019
நான் இல்லை அவனே
اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ
قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه،
நான் மறைந்தால் அவன் வெளியாவான்.
அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.
இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.
ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது.
ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான் அவன் தான் யாரென்று உணர்ந்து கொள்வான்.
“அன்னிய்யத்” என்றால் நான் என்ற உணர்வு “அனானிய்யத்” என்றால் நான் என்ற மமதை “அனானிய்யத் என்ற மமதை நற்பண்புள்ளவர்களிடம் இருக்காது. ஆயினும் இது தீக் குணமுள்ளவர்களிடம் இருக்கும்.
“அன்னிய்யத்” நான் என்ற உணர்வு “நப்ஸை” அறுத்தெறிந்தவர்கள் தவிர மற்றவர்களிடம் நிச்சயமாக இருக்கும். இதை அகற்றுவதும் மிகக் கடினம்.
அல்லாஹ்வை அடைய விரும்பும் ஒருவன் மேற்கண்ட இரண்டு நச்சுப் பாம்புகளையும் கொன்றொழித்தால் மட்டுமே அவன் அல்லாஹ்வை அடைவதற்கு தகுதி பெற்றவனாவான்.
நானறிந்த வரை இதற்கு கை கண்ட மருந்து ஒரு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. இது எனது அனுபவம்.
ஒரு இன்ஸான் – மனிதன் – “கமாலிய்யத்” பூரணத்துவம் பெற்ற ஒரு ஞான குருவின் கரம் பற்றி அவர் கூறும் விதிகளைப் பேணி ஆன்மீக வழி நடந்தால் அவனிலுள்ள “அன்னிய்யத்” என்ற நான் எனும் உணர்வு படிப்படியாக குறைந்து முழுமையாக இல்லாமற் போகுமிடத்து அவன் ஆன்மீகத்தில் சுட்டிக்காட்டக் கூடிய ஓர் இடத்தை அடைந்து விடுகிறான்.
அவன் தன்னுணர்வை முற்றாக இழந்ததும் அவன் நினைக்காமலேயே அவனிடம் வளர்ந்து வந்திருந்த “நான்” என்ற உணர்வு இருக்க வேண்டிய இடத்தில் “அவன்” என்ற உணர்வு - அல்லாஹ் என்ற உணர்வு – ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடும்.
இவன் மறைந்தான். அவன் வெளியானான். மறைந்தவன் என்றால் மரணித்தவன் என்றே விளக்கம் வரும். “அப்து” என்ற அடிமை மரணித்தால் அந்த அடிமையின் ஆட்சிக் கதிரையில் “றப்பு” என்ற எஜமான் அமர்ந்து விடுவான்.
இதுவே “அடிமை மறைய எஜமான் உதிப்பான்” என்ற தத்துவத்தின் கருத்தாகும்.
“இன்ஸான்” மனிதன் தன்னுணர்வை இழந்துவிட்டால், இவன் இறந்து விட்டால் – “இன்ஸான்” என்ற பாத்திரம் – “மள்ஹர்” மூலம் செயல் வெளியானாலும் அது அல்லாஹ்வின் செயலென்றே கணிக்கப்படும்.
ஒருவன் “நான்” என்ற தன்னுணர்வை இழந்த நிலையில் “அனல் ஹக்கு” நான் அல்லாஹ் என்றே அவன் சொல்வான். ஆயினும் அவ்வாறு அவன் சொன்னது அவனுக்கே தெரியாமலிருக்கும். அவனில்லை எனும் போது அவன் சொன்னான் என்பதும் தவறுதான். “அனல்ஹக்கு” நான் அல்லாஹ் என்று சொன்னவன் அல்லாஹ் தானேயன்றி மனிதனல்ல. ஒரு மனிதன் தான் அல்லாஹ் என்று சொன்னால் தான் “ஷரீஅத்” என்ற வாள் அவனின் கழுத்தை துண்டாக்கும். ஆயினும் அல்லாஹ் நான் அல்லாஹ் என்று சொன்னால் எவ்வாறு “ஷரீஅத்” அவனைக் கொல்லும்?!
இதனால்தான் “மன்சூர் ஹல்லாஜ்” என்பவர் “அனல் ஹக்கு” என்று சொன்னவேளை – “ஹல்லாஜ்” என்ற ஒலிபெருக்கி மூலம் ஹக் தஆலா அவ்வாறு சொன்ன வேளை – அவரை வெட்டிய நேரம் நான் இருந்திருந்தால் அவரை வெட்டுவதற்கு விட்டிருக்கமாட்டேன் என்று “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர்கள் இருவரும் “ஷரீஆ”விற்கு முரணாகவா சொல்லிவிட்டார்கள்?
இதை வாசிக்கும் நேயருக்கு ஒரு கேள்வி ஏற்படலாம். அதாவது “ஹல்லாஜ்” அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கியவர்கள் ஏன் அவ்வாறு வழங்கினார்கள்?
இதற்கு சுருக்கமான விடை சொல்வதாயின் அவ்வாறு “பத்வா” வழங்கியவர்கள் உலமாஉகளாயிருந்தாலும் கூட அது “ஹல்லாஜ்” மீது அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் பிரதிபலிப்பென்றே கூற வேண்டும். ஏனெனில் உலமாக்கள் வழங்கிய “பத்வா”வில் இந்நிகழ்வு நடந்த காலப்பகுதியில் “பக்தாத்” நகரின் அறிவுக் கண்ணாயும், “ஸெய்யிதுத்தாயிபா” ஸுபிகளின் தலைவராகவும் விளங்கிய ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கையெழுத்து அந்த “பத்வா”வில் இருக்க வில்லை.
குறித்த அந்த “பத்வா” அரசனால் ஆறு தரம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் கூட அவர்கள் கையெழுத்திட வில்லை. ஏழாவது தரம் அனுப்பிவைக்கப்பட பிறகுதான் கையெழுத்திட்டார்கள்.
ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் இந்த நடவடிக்கை அவர்கள் அந்த “பத்வா”வை சரி காண வில்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.
அக்காலப்பகுதியில் வாழ்ந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” வழங்கியவர்கள் பொறாமையினால் அவ்வாறு வழங்கவில்லை என்று யாராவது சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொண்டு அவ்வாறாயின் அவர்கள் அவ்வாறு “பத்வா” வழங்கியதற்கான காரணம் என்ன? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.
அதற்கவர்கள் “ஹல்லாஜ்” சொன்னது பிழை என்பதினால்தான் அவ்வாறு “பத்வா” வழங்கினார்கள் என்று சமாளிப்பவர்கள் கதை சொன்னால் அவ்வாறாயின் அந்த “பத்வா”வில் ஆறுதரம் கையெழுத்திட ஜுனைத் றஹிமஹுல்லாஹ் ஏன் மறுத்தார்கள்? என்று அவர்களிடம் கேட்போம்.
ஆறுதரம் மறுத்தாலும் கூட ஏழாவது தரத்தில் கையொப்பமிட்டார்கள் தானே என்று அவர்கள் கூறினால் ஏழாவது தரத்தில் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கையொப்பமிட்டாலும் கூட அப்போது அவர்கள் தங்களின் “ஸுபீ” உடையை கழட்டி வைத்து விட்டு ஒப்பமிட்டதேன்? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.
இங்கு ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும். அது எதுவென்று இங்கு நான் எழுத விரும்பினாற் கூட போலி அறிஞர்களின் வாள் என் கழுத்தை கொய்து விடுமென்று அஞ்சுகிறேன்.
ஆனால் ஒன்றை இங்கு எழுதாமலிருக்க என்னால் முடியவில்லை. ஆய்வாளர்கள் நடு நிலையில் நின்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எந்த சூழ்நிலையில் ஒப்பமிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியாதுள்ளது.
நான் எனது நண்பர்கள் இருவருடன் “பக்தாத்” சென்று இமாம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் சமாதிக்கு முன்னால் நின்ற போது இமாம் ஹல்லாஜ் அவர்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் ஏன் ஒப்பமிட்டீர்கள்? என்று கேட்டேன். எனக்கு பதில் கிடைக்க வில்லை. இந்தப் பாவிக்கு எவ்வாறு பதில் சொல்வார்கள்? என்று என்னை நானே இழிந்துரைத்தவனாக மனக் குழப்பத்துடன் “ஸலாம்” கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். ஜுனைத் நாயகம் அவர்களின் காற்பாதம் என் தலைமேல் வைக்கிறேன். அவர்களின் செருப்பை கழுவிக் குடிப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன்தான். எனினும் அவர்கள் ஒப்பமிட்டதை என்மனம் நூறு வீதம் ஏற்றுக் கொள்ள வில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
المقتول بسيف فتوى العُميان