Sunday, 11 July 2021

திருமண வாழ்த்து

வாழ்த்துக்கும் சாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அலையும் கூட்டம்  ஒருவர் மணமக்களை நபிமார்களைப்போல் வாழுங்கள் என்று வாழ்த்துகின்றார் என்றால் நபியாக வாழ்வது அல்ல நபி வாழ்ந்த வழியாக வாழ்வது தான் வாழ்த்து ஏன் நபிமார்களுக்கு நல்ல வாழ்க்கை மகிழ்வான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கவே கிடைத்திருக்காதா? கஷ்டங்கள் துயரங்கள் இன்பங்கள் இவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்க நபிமார்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது என்று இறைவன் கூறவில்லையா? நபிமார்களைப்போல் வாழ்க என்று இறைவனிடம் துஆ கேட்டால் நபிமார்கள் பட்ட கஷ்டத்தை தான் இந்த மணமக்களுக்கு கொடுப்பான் என்று இறைவன் மீதே அவநம்பிக்கை கொள்கிறீர்களா?இறைவன் நபிமார்கள் வாழ்ந்த நன்மைகள் நல்வாழ்க்கை  இறைவன் மீது நபிமார்கள் காட்டிய ஈமானின் உறுதி இவைகளை இந்த மணமக்களுக்கு தருவான் என்று உறுதியான ஈமான் நமக்கு இல்லையா? பூமியில் குழப்பம் செய்வதுதான் நம் வேளையா? நாம் மணமக்களுக்கு துஆ செய்கிறோமா? சாபமிடுகிறோமா? இது எல்லாம் இறைவனுக்கு தெரியாது என்ற எண்ணமா?وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ كُلًّا هَدَيْنَا ‌ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
(அல்குர்ஆன் : 6:84)