Sunday, 21 June 2020

தொழுகை இறைவனின் அருள்

ஒரு நாள்முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு செல்வம் பெருக வேண்டும் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டார் .அதற்கு ஹஜ்ரத்முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் 40 நாட்கள் இமாம் ஜமாத்தோடு தொழுங்கள் செல்வம் பெருகும் என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர் நான் 40 வருடமாக இமாம் ஜமாத்தோடு தான் தொழுது வருகிறேன் என்றார்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் உங்கள் வீட்டில் ஜன்னல் இருக்கிறதா என்று கேட்க அந்த மனிதர் ஆம் என்றார் .அப்படியானால் அந்த ஜன்னல்களை மூடுங்கள் என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள்.அந்த மனிதர் ஹஜ்ரத் சொன்னது போல் ஜன்னலை மூடினார்.அதன் பிறகு அவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்தால் அந்த வீட்டில் அவருடைய செல்வம் பெருகியது .இதனால் ஆச்சர்யமுற்றவராக அந்த மனிதர் ஹஜ்ரத் அவர்களிடம் வந்து நான் 40 வருடமாக தொழுத பொது வராத செல்வம் இப்போது வீட்டின் ஜன்னல்கலை மூடிய பின்னால் எப்படி வந்தது என்று விளக்கம் கேட்டார்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் சொன்னார்கள் உன் வீட்டின் வழியாக செல்லக்கூடிய தொளுகாதவர்களின் பார்வை அந்த ஜன்னல் வழியாக   உன் வீட்டினுள் பட்டதனால் உனக்கு வரக்கூடிய செல்வம் இவ்வளவு நாளாக தடை பட்டது என்றார்கள். 

இதன் மூலம் நாம் விளங்கக் கூடிய கருத்து :
தெருவில் செல்லக்கூடிய தொளுகாதவர்களின் பார்வை நம் வீட்டினுள் பட்டாலே நமக்கு வரக்கூடிய செல்வம் தடை படும் என்றால்.தொளுகாமலே வீட்டினுள் இருக்கக்கூடியவர்களின் வீடு எப்படி இருக்கும்.அவர்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் முழுமையாக எப்படி கிடைக்கும்.அவர்களின் செல்வம் எப்படி பெருகும். எனவே தொழுகை என்ற நல் அமல் செய்யாமல் இருக்க கூடியவர்களின் வீடு கெட்ட  வீட்டின் அடையாளமாக இருக்கிறது என்று புரிய முடிகிறது .

Sunday, 14 June 2020

இயற்கை மருத்துவம்

இஸ்லாமிய மருத்துவம் -- மருத்துவ டிப்ஸ்!!!

1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: 

அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது. 

வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க 
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள். 

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க 
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும். 

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய 
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

அழகான குழந்தை பிறக்க 
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட 
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். 
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது. 

சர்க்கரை வியாதி நீங்கிட 
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும். 

5. கோதுமை

இதய பலத்திற்கு 
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 

சத்தான உணவு 
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க 
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

குளுமை குறைந்திட 
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள். 

7. இறைச்சி

உடல் அழகு பெற 
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும். மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதை உண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும்  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

உடல் சதைபோட 
ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால் குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

8. முட்டை

ஆண்மைக் குறைவு நீங்க 
யா ரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “முட்டையை உண்ணுங்கள். ஆண்மை அதிகரிக்கும்” என்று ஏவினார்கள். 

தாது பலம் பெற 
எல்லாம் வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபி அல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்” என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

9. தேன்

பலஹீனமே இல்லாதிருக்க 
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் 

1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும். 
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும். 
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும். 
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும். 

ஜீரண சக்திக்கு 
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான். 

10. பால்

நோய்கள் வராதிருக்க 
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். 

நரம்புத்தளர்ச்சி நீங்க 
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும். 

11. தண்ணீர்

ஜீரண சக்திக்கு 
உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால் பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்து இளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்து விடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள். 

12. மழைத் தண்ணீர்

எல்லா நோய்களும் நீங்கிட 
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது “வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள். 

13. ஜம்ஜம்

நினைத்தது நிறைவேற 
“இந்த ஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்கு நிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னு முபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

14. சுர்மா

கண்ணொளி பெருகிட
நீங்கள் தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச் செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

15. பூண்டு

புண்கள் ஆறிட 
பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது. 
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும். 
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது. 
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும். 

16. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள். 

17. அத்திப்பழம்

உடல் அழகு பெற 
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

18. அதிமதுரம்

தொண்டைவலி நீங்க 
பால்குடி பருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும். அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலை விட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படி செய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து “தங்களுடைய குழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனை செய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்” என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

மாதத்தீட்டு ஒழுங்காக வர 
சில பெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறே சில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போது அதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்து விடும். வயிற்று வழியும் நீங்கி விடும். 

19. முள்ளங்கி

பசி உண்டாக 
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். 
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும். 
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும். 
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும். 
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை. 

20. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது. 

இரத்தம் சுத்தமாக 
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும். 
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள். 

21. சுரைக்காய்

மூளை பலத்திற்கு 
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 

மூத்திரம் கோளாறுகள் நீங்க 
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும். 

22. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக 
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்) 

23. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட 
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும். 
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும். 
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும். 
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும். 

24. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு 
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும். 
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும். 
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

25. காளான்

கண்ணோய் குணமாகிட 
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து “காளான் பூமியின் அம்மை நோய்” என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

26. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும் 
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும். 
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது. 

27. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள். 

அழகான தோற்றத்திற்கு 
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச் சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும்.

Saturday, 13 June 2020

birai பிறை

சர்வதேச பிறை அல்ல பிழை  !!
*****************************
சர்வதேச பிறை என்பது அறிவுக்கு அடிமையானதினால் வந்த வினை இது ஒரு தெளிவான வழிகேடே இன்றி வேறெதும் இல்லை !!

அறிவை படைத்த ரப்புவின் கட்டளைகளை
சிந்திப்பதனால்
பகுத்தறிவு பெற முடியும் !!

இப்னு உமர்(ரலி) அவர்களின் அறிவிப்பில் வருகின்ற
"பிறையை
கண்டால் நோன்பு வையுங்கள்  ,இன்னும் 
நோன்பை விட்டுவிடுங்கள் மேகமூட்டமாக இருந்தால்  கணகிட்டு கொள்ளுங்கள்
(முப்பதாக)"
صحيح البخاري ( 1906, 1907 )
صحيح مسلم ( 1080 )
سنن أبي داود ( 2320 )
سنن النسائي ( 2120, 2121, 2122 )
سنن ابن ماجه ( 1654 )
موطأ مالك ( 781, 782 )
سنن الدارمي ( 1726, 1732 )
مسند أحمد ( 4488, 4611, 5294, 6323 )

இந்த அளவு தெளிவான ஆதாரமுள்ள ஹதீஸ்
கள் இருந்தும் 
நட்சத்திர கணக்கை கையாண்டும்,கிரிகோரியன் காலண்டர் கணக்கை கையாண்டும் 
உலக முஸ்லீம்களை ஒன்றினைத்து
பரஸ்பரத்தை வலுப்படுத்துவோம் போன்ற பாசாங்குகள் அனைத்தும் விசுவாசிகளுக்கு
அழகல்ல....

ஏக இறைவனின் இறுதியான உறுதயான பிறை விடயத்தில் தனது கட்டளையை இறை தூதர் (ஸல்) அவர்களின் மூலமாக நமக்கு அறிவுருத்த பட்டும் ,

நமது ஸலபுகளாகிய (முன்னோர்களாகிய) சத்திய சஹாபாக்களின் வழி முறையும் ,கண்ணியமான 4 மத்ஹபுகளின் இமாம்களின் ஏகோபித்த கருத்தும் اختلاف المطالع -பிறையின் 
மாறுபட்ட உதிப்பு சரியே எந்த நாடுகளில் பிறை தென்படுகிறதோ அங்கு முடிவெடுக்கப்படவேண்டும் நோன்பு உண்டா ? இல்லையா என்று .

எவ்வாறு தொழும் நேரம் ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடுகின்றனவோ அதை நாம் ஏற்று 
கொள்கின்
றோமோ அது போன்றுதான் ஏற்க வேண்டும் ,தேசிய பிறையை கூட ஏற்க முடியும் ஆனால் சர்வ தேச பிறை என்பது ஒரு தெளிவான இஸ்லாம் காட்டிதராத ஒரு வழிகேடு .

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்பொழுது 
"
நட்சத்திர கணக்கீடு இஸ்லாதில் அனுமதிக்கபடவில்லை இதில் எந்த சந்தேகதிற்கும் இடமில்லை இதுதான் ஆதாரபூர்வமான 
நபிமொழிகளின் மூலம் இன்னும் ,ஸஹாபாகளின் வழி முறையும் ஆகும் 
மஜ்மஉல் பதவா -
207/25.

முஸ்லிம் கிரந்தத்தில் உள்ள குரைப் பின் அபூமுஸ்லிம்  (ரலி)அவர்களின் சம்பவத்தில் மதீனாவிலிருந்து ஷாம் தேசதிற்க்கு அவர்கள் ஒரு பணி நிமிர்தமாக முஆவியா (ரலி) அவர்களை சந்திக்க செல்கின்றார்கள் அங்கு ஜும்மா இரவில் பிறை பார்கபட்டு நோன்பு நோற்று விட்டு அந்த ரமலானின் இருதியில் மதீனா வருகின்றார்கள் 
அங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஷாம் தேசத்தில் அவர்கள் நோன்பு 
நோற்ற தினமாக ஜும்மா இரவை அவர்கள் குறிப்பிட அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நீங்கள் பிறையை ஜும்மா இரவு கண்டீர்களா ? என கேட்க ஆம் அங்கு மக்கள் அனைவரும் கண்டனர் எனவே முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தனர் என்று கூறினார்கள் ,இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நாங்கள் சனி இரவுதான் கண்டோம் ஆதலால் நாங்கள் ஒரு நாளில் நோன்பை தொடர்ந்து முப்பதை பூர்த்தி செய்வோம் அல்லது பிறையை பார்த்து விடுவோம் என்றார்கள்   ,குரைப் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கேட்கிறார்கள் ஏன் முஆவியா (ரலி) அவர்கள் கண்டு நோன்பு பிடித்தது போதாதா ? என்று 
அதற்க்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (தெளிவு படுத்துகின்றார்கள் ) இல்லை ,இவ்வாறு நமக்கு (கண்ணால் காண ) இறை தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள் .
‎ صحيح مسلم ( 1087, 1088 )
‎سنن أبي داود ( 2327, 2332 )
‎سنن الترمذي ( 688 )
‎سنن النسائي ( 2111, 2124, 2125, 2129, 2130, 2189 )
‎موطأ مالك ( 783 )
‎سنن الدارمي ( 1725, 1728 )
‎مسند أحمد ( 1931, 1985, 2335, 2789, 3021, 3208, 3515 )

இந்தஹதீஸிருந்து விளங்கும் சில 
வழிகாட்டல்கள் :-

🔹இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் இந்த ஸஹீஹான அறிவிப்பு  ஒவ்வொரு நாட்டிற்கும் பிறை பார்கவேண்டும்
என்பதிற்க்கு வலு ஊட்டுகின்றது என்றும்,எந்த ஊரில் அதிகபடியான மக்கள் ஜமாதாக ஒரு முடிவினை பிறை விடயத்தில் எடுகின்றார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் தங்கள் கிரந்ததில் குறுப்பிடுகிறார்கள் ,

🔸எனவே தூரமாக இருந்த ஷாம் தேச பிறையை (சர்வதேசமயமாக்கல் பிறையை ) 
ஹிஜாஸ் பகுதியில் உள்ள இறைதூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏன் எடுத்து கொள்ள வில்லை ,முஆவியா (ரலி) அவர்களின் கிலாபத்தில் ஷாம் அப்பொழுது ஒரே சாம்ராஜியத்தில் இருந்தது என்பதினையும் ஏன் இந்த சர்வதேச பிறைவாதிகள் சிந்தனை கொள்ளவில்லை ?!!

🔹அவர்களை விட நாம் இன்று அறிவு ஜீவிகளாக ஆகிவிட்டோமா !!

🔸அது போன்று சர்வதேச பிறையை போதிப்பவர்கள் மக்களை இந்த விததில் குழப்பதில் இட்டு விடுகின்றனர் அதாவது நீங்கள் கண்டது பிறை அல்ல பிழை
மிக பெரியது பாருங்கள் அறிவிற்கும் பொருந்தவில்லை நீங்கள் கண்ட பிறை என்று கூறுகிறார்கள் ,

🔹சரியான பிறையின் அளவுகோல் பிறையின் அளவு சிறியதா ? அல்லது பெரியதா ? என்பதை வைத்தும் அல்ல என்பதை கீழ் உள்ள அறிவிப்பை தலைப்பாகவே இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்ததில் சுட்டி காட்டியுள்ளனர் ,

மற்றும் ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பு முஸ்லிம் கிரந்தத்தில் அபுல் பக்தரி என்ற சயீது பின் அல் புரோஸ் அவர்கள் மூலம் அறிவிக்கபடுள்ள ஒரு சம்பவம் உள்ளது ,
"
நாங்கள் உம்ரா செய்வதற்காக சென்றோம் "நக்லா" என்ற இடத்தை அடைந்த பொழுது பிறை காண சிறமபட்ட பொழுது சிலர் மூன்றாம் நாள் என்றனர் சிலர் இல்லை இரண்டாம் நாள் என்றனர் அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை வைத்து கேட்டோம் அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வினவினார்கள் எந்த இரவில் கண்டீர்கள் என்று ,நாங்கள் கூறினோம் இந்த இந்த இரவென்று ,
அதற்க்கு அவர்கள் இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் அதாவது உங்கள் பார்வைக்காக அல்லாஹ் அதை நீட்டி கொடுத்தான் ,எந்த இரவில் நீங்கள் கண்டீர்களோ அது தான் பிறை என்று ,
صحيح مسلم 
‎8 ( 29 ) (المجلد : 3 الصفحة : 127)

அன்று இன்றுபோல் ஒரே வீட்டில் இரண்டு பெருநாட்களை (சர்வதேசமயமாக்கல் பிறையின் தாக்கதால் )
அவர்கள் நம்மை போல் கொண்டாட வில்லை ,அதலால் அடித்து கொண்டு நமது ஒற்றுமையை குலைக்க வில்லை !!

எனவே பிறச்சினை நாடுகளின் எல்கைகள் அல்ல பிறை தென்பட்டு அதை பார்பது  தான் ,

 ஒரே இறைவன் ஒரே தூதுவர் ஒரே மார்கம் ஒரே சர்வதேச பிறை என்பது கேட்பதிற்க்கு அழகாக உள்ளது இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இன்று பல ஈத் தொழுகையை அடுத்தடுத்த நாட்களில் தொழ வைத்து நம் ஒற்றுமையை கூறு போட்டு விட்டது,முஸ்லீம்களின் ஒற்றுமையை பேணுவது பர்ள் அல்லவா  !!

எனவே இறைவனின் கட்டளைகளை விட்டும் நம்மை
திசை திருப்பமும் எந்த சர்வதேச
பிறையும் நம்மை நமது சத்திய பாதையிலிருந்து வழி தவற வைத்து விட கூடாது ,சர்வதேச பிறை ஒரு தெளிவான வழி கேடு என்பதின் பால் நாம் மக்களை  அழைத்து இணை வைப்போரில்
நின்றும் இல்லாமல் இருப்போமாக

*****************************
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
(அல்குர்ஆன் -28:87)

*****************************
‎‏#ரமலானிய சிந்தனைகள்#
சுக்ரன் ஜஸீலா நன்றி
 
‎‏-மௌலவி SM.இஸ்மாயில் நத்வி

Tuesday, 9 June 2020

உள்ளத்தில் இருப்பவன்

ஷாதுலிய்யா
தரீக்காவை தந்த
மாபெரும்
இறைநேசர்
இமாம் 
அபுல் ஹஸன் ஷாதுலி
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்

ஒருதடவை 
18000 ரூபாய்
மதிப்புள்ள
ஆடை அணிந்து 
மக்களுக்கு
முன் பயான்
செய்தார்கள்! 

அப்போது
இறை நேசர்களை
குறை சொல்கிற
பொறாமை
குணம் கொண்ட
ஒரு மனிதன்
எழுந்து.. 

"உங்களை 
பெரிய சூஃபி
என மக்கள்
சொல்கிறார்கள்
நீங்கள்
இவ்வளவு உயர்தரமான
ஆடை அணிந்து
இருக்கிறீர்களே?"
என கோபமாக
கேட்டான்.

"எனக்காக
உடுத்தவில்லை
உனக்காக தான்
உடுத்தி
இருக்கிறேன்!"
என அமைதியாக
சொன்னார்கள். 

எனக்காகவா?
ஏன்? என
கேட்டான்.

"நான் உடுத்தி
இருக்கும்
இந்த உயர் தரமான
உடையைப்
பார்த்தால்...

நான் வசூலுக்கு
வரவில்லை
என்பதாக.. 
நீ எழுந்து
போகாமல்
உட்கார்ந்து பயான்
கேட்பாய்
அல்லவா?
அதனால் தான்
என்றார்கள்.

மேலும், அவன்
உங்களுக்கு
நிறைய சொத்துக்கள்
இருக்கிறதாமே?
என கிண்டலாக
கேட்டான்.

இமாம் அபுல்ஹஸன் ஷாதுலி நாயகம்
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
அழகாக பதில்
சொன்னார்கள்:

"ஆம்..!
குதிரைகள்...
ஒட்டகங்கள்...
நிலங்கள்...
வீடுகள்...
பணங்கள்..
எல்லாம் எனக்கு
இருக்கின்றன! "

"அவைகள் எல்லாம்
அந்த... அந்த...
இடங்களில்
இருக்கின்றன.. 

"என் உள்ளத்தில்
அல்லாஹ் மட்டுமே
இருக்கின்றான்..!"

ஆனால் 
"உன் கல்பில்
எல்லாம்
இருக்கின்றன
அல்லாஹ் மட்டும்
இல்லை..!" 
என சொன்னதும்
வெட்கித் தலை
குனிந்தான்.