#ரோமாபுரியின்_சக்கரவர்த்தி_கைஸர், அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி,
அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அனுப்பினார்கள்....!!!
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]
என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ
பேரறிஞர் இப்னு அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்...!!
2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்...
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்....!
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்....!!
5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு..!!!.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த நபி சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதி அற்புத ஒட்டகம்...!!
[3] மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாம்பு.
6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர்...!! சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்..!!!
சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து...!!!.
7, ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்...!!!!
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்...!!!!
ஸுபுஹானல்லாஹ்
ஸித்றத்துல் முன்தஹா
No comments:
Post a Comment