Saturday, 16 September 2017

ரிபாயி (ரலி)

நமது உயிரினும்  மேலான பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  காலத்தில் சிவப்புக் கொடி பல  தடவைகள் உயர்த்தபட்டிருக்கிறது...!

ஆனால் பிறையுடனும் ஐகோண நட்சத்திரத்திடனும் கூடிய சிவப்புக் கொடியை முறைப்படுத்தி,,,

உரிய நிய்யத்துடன் உயர்த்தியவர்கள், ஹஜ்ரத்  ஸூல்தானுல் ஆரிபீன் ஸையிது அஹ்மது கபீர் ரிபாயி ரஹிமஹூல்லாஹூ  அவர்கள்தாம்....!!

இந்த கொடியே பின்னர் இஸ்லாமிய உலகின் கொடியாக  முஸ்லிம் உலகக் கலிஃபாவின் கொடியாக ஆயிற்று...!

பிற்காலத்தில் முஸ்லிம் உலகின் கொடியாக இந்தச் சிவப்புக் கொடி உலகின் முஸ்லிம்கள் வாழ்ந்த சகல ஊர் களிலும் உயர்த்தப்பட்டது.!

இந்த கொடியில் சிவப்பு நிறத்தையும் -பிறை-நட்சத்திரத்தையும் உண்டாக்கிய ஆண்டகை அவர்கள் அதன் மூலமும் மகத்தான அகமியங்களை வெளிப்படுத்தினார்கள்..!!

கொடியிலுள்ள ஐகோண நட்சத்திரம்  முஸ்லிம் சமுதயாயத்தைக் குறிப்பதாகவும் ,,

பிறை நபி பெருமான்  ஸல்லல்லாஹூ அலைஹி  வஸல்லம்  அவர்களை குறிப்பதாகவும்...,,

கொடியின் சிவப்பு நிறம் அல்லாஹ்வின் தீவிர சக்தியான "ஜலாலை"க் குறிப்பதாகவும்,,

நிய்யத்து வைத்து ஆண்டகை அவர்கள் இந்தக் கொடியை உயர்த்தினார்கள்...!

ஐந்து கடமை களைக் கொண்ட இஸ்லாத்தின் அனுஷ்டானத்தில்லுள்ளவர்கள் முஸ்லிம்கள்,,,

அவர்கள் மனிதனின் ஐந்து படித்தரங்களில் நம்பிகை கொண்டவர்கள்..!

எனவே ஐந்து முனை களைக் கொண்ட நட்சத்திரம்மாக முஸ்லிம் சமுதாயத்தை அவர்கள் உருவகப் படுத்தினார்கள்..!

இந்த உலகம் ஒருவகை இரவாகும் ,,,

மஹ்ஷர் என்ற சூரியயோதயம்....,,

வரும்போதுதான் நாம் பகலைப் பார்க்க முடியும்..!

ஆனால் இரவில் சந்திரன் இருக்கிறது.!

சந்திரனின் அந்த வெளிச்சம் சூரியனிடமிருந்து வாங்கப்பட்ட வெளிச்சம் தான்,,

எனவே நாம் இரவில் இருந்தாலும் ஒரு வகையில் சந்திரன் மூலம் சூரியனுடைய வெளிச்சத்தை பார்க்கிறோம்...!!

இது போன்றே இந்த உலகம் என்ற இரவில் இருக்கும் நாம் ,,,

அல்லாஹ்வைக் காண முடியவில்லை:

மஹ்ஷரில் காண்போம்,,,

ஆயினும் சூரியனுடைய வெளிச்சத்தைச் சந்திரன் மூலம் பார்ப்பது போல்,,,

அல்லாஹ்வின் சுடர்,, முழுமதி முஹம்மது ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பட்டதை மட்டும் பார்க்கக்கூடியவர்களாய் இருக்கிறோம்..!!

அந்த சுடரின் வெளிச்சத்தைப் பெறும் உரிமை சத்திய முஸ்லிம்கள் யாவருக்கும் உரியதாகும்.!

அந்தச் சுடர்தான் °°°நூரே-முஹம்மதிய்யா என்பது...!

எனவே கண்மணி நபிகள் பெருமானாரைக் குறிப்பதாகப் பிறையை ஆண்டகை அவர்கள் கொடியில் அமைதார்கள்..!

இரவில் சூரியக் கிரணங்கள் நேரடியாக வராது சந்திரன் மூலம்மாக வருவதுப்போல,,,

அல்லாஹ்வின் சுடர்கள் சிருஷ்டிகள் மீது விழுவது..7..ஏழு வகைப்பட்டதாகும்.!

இந்த 7ஏழு வகையில் விழும் சுடரில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு நிற அடையாளம் உண்டு...!

இறங்கும் சுடரின் தன்மைக்கு ஏற்ற காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற நிறங்களை நாதாக்கள் உபயோகித்துள்ளனர்..!

எனவே ஸூல்தானுல் ஆரிபீன் ஆண்டகை அவர்களும் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ற,,

சுடர் இறங்கவேண்டும் மாதலால் அதற்கேற்ற நிறத்தைக் கொடியில் அமைதார்கள்..!

ஆண்டகை அவர்களின் காலத்தில் சைத்தானிய சக்திகள் தலைதூக்கி நின்றன..!

அவற்றை எதிர்த்துப் போராடிச் சன் மார்க்கத்தை வளர்க்கத் தீவிரமான சக்தி தேவையாய் இருந்த்து ..!

எனவே சாத்வீக மகாத்மாவாவான ஆண்டகை அவர்கள் அல்லாஹ்வின் தீவிர சக்தியான "ஜலால்" அதிகமும் வளரவேண்டும்,,என்று,

"ஜலாலு"க்கு உள்ள நிற அடையாளமான சிவப்பைக் கொடியில் சேர்தார்கள்..!

நபி பெருமான்  ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களின் வழியாக முஸ்லிம் சமுதாயமானது  நட்சத்திரத்தில் பட்டு,,

"ஜலால்"

ஒளி வீசவேண்டும் என்பது அவர்களின் நிர்ணயமாக -நிய்யத்தாக இருந்த்து ..!

(மாபெரும் மகாத்மா ரிபாயி ஆண்டகை என்ற புத்தகத்தின் பதிவு )(மீள் பதிவு)

No comments:

Post a Comment