Sunday, 17 September 2017

சுலைமான் (அலைஹி )

ஹஜ்ரத் சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸ்சை ஜின்களை வைத்து கட்டிக்கொண்டிருக்கும்போதே இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்கள் .
தன் கையிலே அசா (ஊன்றுகோல் )இருக்கிறது அதை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் அந்நிலையிலே அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிகிறார்கள் .
ஜின்கள் சுலைமான் நபி உயிரோடு இருக்கிறார்கள் என்ற எண்ணத்திலே வேலை செய்கிறார்கள் .
ஊன்று கோலை கொஞ்சம் கொஞ்சமாக கரையான் அரிக்கிறது அதன் அடிப்பாகத்தை ஓட்டு மொத்தமாக அரித்த உடன் சுலைமான் நபியவர்களின் புனித உடல் பூமியில் சாய்கிறது.

அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபியவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்ற உண்மை தெரிய வருகிறது சுலைமான் நபி ஒரே இடத்தில் பல வருடங்களாக எப்படி நிற்க முடியும்? ஜின்களுக்கு சந்தேகம் வரவில்லையா என்ற கேள்வி நமக்கு வரும் .
(நாம் கேள்வி கேட்க பிறந்தவர்கள்தானே )

அதற்க்கு முஃபஸ்சிரீன்கள் (குர் ஆணுக்கு விளக்கம் கொடுப்பவர்கள் ) கூறுகிறார்கள் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இதற்க்கு முன்பே ஒரு பழக்கம் இருந்தது அதாவது அவர்கள் இறை தியானத்தில் பல வருடங்கள் நின்ற நிலையிலே கழிப்பார்கள் எனவே ஜின்கள் இப்போதும் அவர்கள் இறை தியானத்திலே இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டது .

நாம் இறந்து விட்டால் பூமிக்கு உள்ளே சென்றாலும் வெளியே நம் உடல் இருந்தாலும் சில நாட்கள் கடந்து விட்டாலே நாறிவிடும் (அல்லாஹ் நாடிய நல்லடியார்களின் உடல்களை தவிர ) ஊன்று கோலை அறித்த கரையான் அல்லது இறந்து விட்ட மனித உடலை சுற்றி வட்டமிடும் மற்ற பூச்சிகள் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களின் உடல் பக்கம் செல்லவில்லை
நபிமார்களின் உடலை மண் தீண்டாது என்பதை அல்லாஹ் இதன் மூலம் விளக்கி காட்டுகிறான் .

No comments:

Post a Comment