Monday, 13 August 2018

அல்லாஹ்வின் வாஜிபான 20தன்மைகள்

அல்லாஹுவின்
வாஜிபான 20 தன்மைகளுக்கு
குர்ஆனின் மூலம் விளக்கம் தர
ப்பட்டுள்ளன.
அல்லாஹூ தன்திருமறையில்

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا  سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ 
இத்தகையவர்கள் (தங்கள்) நின்றநிலையிலும்,இருப்பிலும்,  படுக்கையிலும் அல்லாஹ்வை யே நினைத்து, வானங்களை யும் பூமியையும் அவன்படைத்தி ருப்பதை ஆராய்ச்சி செய்வார் கள்.மேலும்,"எங்கள்இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்க வில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனை யிலிருந்து எங்களை நீ காப்பா ற்றுவாயாக!
(அல்குர்ஆன் : 3:191)

நபி(ஸல்)தன் மொழியில்

  1 - عنِ ابنِ عبَّاسٍ: أنَّه صلَّى اللهُ عليه وسلَّم خرَج على أصحابِه فقال: ما جمَعكم ؟ فقالوا: اجتمَعْنا نذكُرُ ربَّنا ونتفكَّرُ في عظَمتِه، فقال: تفكَّروا في خَلْقِ اللهِ، ولا تفَكَّروا في اللهِ؛ فإنَّكم لن تقدُروا قَدْرَه. .
الراوي: عبدالله بن عباس المحدث: السخاوي - المصدر: المقاصد الحسنة - الصفحة أو الرقم: 191
خلاصة حكم المحدث: إسناده ضعيف
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் வெளியே வந்தார்கள்  தம் தோழர்கள் ஒன்று சேர்ந்து இருந்தார்கள் தோழர்களே!எதற்காக ஒன்று சேர்ந்து இருக்கிறீர்கள் என்று நபிய வர்கள கேட்க?நாங்கள் நம்
ரப்பை "திக்ரு "செய்கிறோம்
அவனின் கண்ணியத்தை பற்றி
சிந்திக்கிறோம் என்று கூறினா ர்கள். அப்போது நபி( ஸல்)அவர் கள் அல்லாஹ்வால் படைக்கப்ப ட்டபடைப்புகளைப்(எவ்வாறு படைத்திருக்கிறான்)என்று சிந்தியுங்கள நிச்சயமாக அவன்(எப்படி,எவ்வாறு,)இருக்கிறான் என்ற கற்பனை செய்வ தற்குநீங்கள்சக்திபெறமாட்டீர்கள்?ஆகவே  அல்லாஹ்வின்  உள்ளமையைபற்றி  மட்டும் சிந்திக்காதீர்கள?அறிவிப்பு:இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்
பதிவு:மகாஸீதுல் ஹஸனா ஹதீஸ் எண் 191
                      
           ١.الوجود
                         அல்உஜூத்                         
   உள்ளமை கொண்டவன்

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏ 
அல்லாஹ்வே எல்லாபொருள்க ளையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறு ப்பாளன்.
(அல்குர்ஆன் : 39:62)
                       
                   ٢.القديم        கதீம்
           -பூர்வீகமானவன் 

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ 
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சமடலைப்போல்(பிறையாக) ஆகும்வரையில்சந்திரனுக்கு நாம் பல நிலைகளைஏற்படுத்தி  இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 36:39)
                            ٣.البقأء
               அல்பகாஃவு            முடிவில்லாதரிபாடுவுள்ளவன்
وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌‏ 
மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களதுஇறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன்55:27)
        ٤.   المخالفة الحواديث
முஹாலிபஃதுல் ஹலாதிஸி
புதிய புதிய நிகழ்வுக்கு மாற்றமானவன்
   لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌

அவனுக்கு ஒப்பானது ஒன்று மில்லை
அல்குர்ஆன்:42:11
                 ٥    قيامه بنفسه
கியாமுஹு பிநஃப்ஸிஹி
தன்தானே என்றும்  நிலையானவன் 
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ‌
(அந்நாளில்)நிரந்தரமானவனும் நிலையானவனுமாகிய(இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 20:111)
                        
                        
                 ٦   وحدانيته
        வஹதானிய்யதிஹி
      ..என்றும் தனித்தவன்

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  
(மனிதர்களே!)உங்கள்வணக்கத்திற்குத்தகுதியானவன்ஒரேயொரு இறைவனே ஆவான்.
(அல்குர்ஆன் : 2:163)

                           ٧.حياة
                   ஹயாத்து
          என்றும் வாழ்பவன்
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ

அல்லாஹ் (எவ்வித மகத்துவமு டையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதி யான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்
(அல்குர்ஆன்3:2)
                            ٨.العلم -இல்மு
 

அறிவு
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ            ١.الوجود
                         அல்உஜூத்                         
   உள்ளமை கொண்டவன்

நபியே! நிச்சயமாக கல்வி (ஞானம்)அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. என்று
கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 67:26)
                             ٩.الارادة
                 இராதத்
                  நாட்டம்
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏ 
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை "ஆகுக!" எனக் கூறுவதுதான்  உடன் அது ஆகிவிடுகின்றது.
(அல்குர்ஆன் : 36:82)

                          ١٠.قدير
                     கதீருன்
                    ஆற்றல்
اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
நிச்சயமாகஅல்லாஹ்அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 2:20)
                          ١١.السمع  
                      ஸம்உ
                     கேள்வி
                     ١٢. والبصر
                      பஸருன்
                     பார்வை

وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ‌ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 

உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
(அல்குர்ஆன் : 16:78)

                        ١٣.    الكلام
                      கலாம்
                       பேச்சி
وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا

மூஸாவை அல்லாஹ்  பேச வை த்தான்மூஸாவுடன்அல்லாஹ்பேசியும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:164)

                       ١٤    الحي
                அல்ஹைய்யு
        
என்றும்தன்தானேஉயிருடன் இருப்பவன்
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ 
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.
(அல்குர்ஆன் : 3:2)
                         العالم
                  அல்ஆலிமு
         என்றும்தன்தானே                அறிவுடனிருப்பவன்    

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ‌  هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏ 
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும்வெளிப்படை யானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 59:22)

                       ١٦.    المريد
                அல்முரீது
என்றும்தன் நாட்டமுடையவன்
فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ‏ 
தான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன்.
(அல்குர்ஆன் : 85:16)
                        ١٧.    القادر
                  அல்காதிர்
என்றும் தன்ஆற்றலுள்ளவன்

قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ்சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வை த்துள்ளான்.)  எனினும் அவர்க ளில்பெரும்பாலோர்(அதனை)அறிந்துகொள்வதில்லை.
(அல்குர்ஆன்6:37)
                     ١٨    السميع
                அஸ்ஸமீஉ
என்றும்தானே கேட்பவன்
وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 
அவன்(அனைத்தையும்)செவியு றுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:137)
                             ١٩.البصير
                 அல்பஸீர்
என்றும்.தானே பார்ப்பவன்

               وَاللّٰهُ بَصِيْرٌ بِمَا يَعْمَلُوْنَ ‏ 
அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்றுநோக்குபவனாகஇருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:96)
ا                    ٢٠    ا لمتكلم
            அல்முதகல்லிம்
   என்றும்சுயமாகபேசுபவன்
قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான்.(இறந்த)பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்.
(அல்குர்ஆன் : 41:21)

மேற்கண்ட அனைத்து தன்மை
களும் வணங்கப்படுபவனுக்கு
கட்டாயம்நிரந்தரமாகஅழிவில்லாமல்இருக்கவேண்டியதன்மைகளாகும்.இந்த மிஸ்கீன் வரைந்தவற்றில்குறையிருப்பின்சுட்டிக்காட்டுமாறுமிகதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்

மிஸ்கீனின் கவி ஒன்று

ரப்பே உன் பேச்சு வேண்டும்
ரப்பே உன் நினைவு வேண்டும்
உன்தன்நினைவுடனே யான்
உன்னிடம் மீள வேண்டும்

படைப்பின்தன்மை யாவும்படை த்தோனின் சொந்தமாகும்-படை த்தோனைஅறிந்துவணங்க
ரப்பே மனுவைப் படைத்தான்

வாழ்வு அறிவு நாட்டம்  சக்தி
வல்ல  நாயனின் சொந்தம்
கேள்வி பார்வை பேச்சு
வல்ல நாயனின்  சொந்தம்

உயிரற்ற யன்னை  நீயே
உயிருள்ளோனாககாட்டி  உயிருள்ளோனே நீயே உன்- நினைவில்நிலைக்கச்செய்வாய்

அறிவில்லா யன்னை நீயே
உன்னைஅறிய காட்டி
உன்னை அறிந்து வணங்க
உதவி புரிந்தருள்வாய்

நாட்ட மற்ற யன்னை நீயே
உன்நாட்ட முள்ளோனாக காட்டி
நன்நாட்டமுடனே யன்னை
உன்னாட்டமாகிடுவாய்

முடமான யன்னை நீயே
சக்தியுள்ளோனாக காட்டி
சக்தி நிறைந்த வனே
சக்தியை அருள்புரிவாய்
 
செவிடனான யன்னை நீயே
கேட்போனாக காட்டிஉன்
உள்ளமையைகேட்டுரசித்துக்
உன் வழியில் நடக்க செய்வாய்

குருடனான யன்னை நீயே
பார்க்கும் பாக்கியம் தந்து
உன் மறையை பார்த்து ருசிக்க
பாக்கியம் தந்தருள்வாய்

ஊமையான யன்னை நீயே
பேச வைத்தது கேட்டு ரசிக்கும்
ரசிகனே ! நீயே அல்லாஹூ
உன்னையே! பேச வைப்பாய்

ரப்பே  உள்ளமை ஏழிலும்
எதிலும்இணையாக்கிடாமல்
இவ்வுலகில் வாழ்ந்திடவே
இணையில்லா அருள் புரிவாய்

ரப்பே!உன் ஜமாலி குலாமின்
கவியினைஏற்றிடுவாய்
கலிமாவின் வாழ்கைதன்னை
கரையின்றி தந்தருள்வாய்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் சில இடங்களில் பிழைகள் இருக்கிறது

    ReplyDelete