Sunday, 26 July 2015

ஓதிப் பார்ப்பது

ஓதிப் பார்ப்பது, தாயத்துஇதற்கு ஆதாரம் இரĬ

கேள்வி: முஸ்லிம்கள் ஓதிப் பார்ப்பது, தாயத்து போடுவது போன்ற செயல்களை செய்கிறார்களே! இதற்கு ஆதாரம் இருக்கிறதா?
பதில்: நம்மில் எவருக்கேனும் தலைவலி, காய்ச்சல், மனப் பயம், கண் திருஷ்டி போன்ற நோய்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஒரு ஆலிமிடமோ, ஷெய்கிடமோ, சாலிஹான மனிதரிடமோ சென்று ஓதி பார்ப்பதன் மூலம் சுகம் கிடைக்கும் என்று ஓதிப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் செய்வதற்குரிய ஆதாரத்தைப் பார்க்கலாம்.
ஓதிப் பார்ப்பதற்குரிய ஆதாரம்:
رأيت أثر ضربة في ساق سلمة فقلت ما هذه؟ قال: أصابتني يوم خيبر فقال الناس أصيب سلمة فأتى بي رسول الله صلى الله عليه وسلم فنفث في ثلاث نفاثات فما اشتكيتها حتى الساعة
‘நான், ஹழ்ரத் ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது கெண்டைக்கால் பகுதியில் காயத்தின் அடையாளமொன்றைக் கண்டு இது எப்படி ஏற்பட்டதென்று கேட்டபோது, இது கைபர் யுத்த களத்தில் வைத்து ஏற்பட்டதென்று கூறினார். பின்னர் இதுபற்றி பலரும் பலவிதமாகப் பேசியபோது நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டு, நபியவர்கள் மூன்று முறை ஓதி ஊதினர். அதன்பின் இதுவரை அக்காயத்தினால் நான் பாதிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தனர்.
அறிவிப்பாளர்: யஸீத் இப்னு அபீ உபைத் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: புஹாரி, கிதாபுல் மகாஸி, பாபு கஸ்வத்தி கைபர், அபூதாவுத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 219.
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم نان اذا اشتما يقرأ في نفسه بالمعوذات وينفث فلما اشتد وجعه كنت أقرأ عليه وامسح عليه بيده رجاء بركتها
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாதியுற்றால், அவர்கள் சூறத்துல் ஃபலக் மற்றும் சூறத்துன் நாஸ் ஆகிய இரு ஸூராக்களையும் ஓதி தமக்குத் தாமே ஊதிக் கொள்வார்கள். வேதனை அதிகமாக இருந்தால் நான் ஓதி அவர்களது கரத்தில் ஊதுவேன். அதனை அவர்கள் அருளை நாடி தன் மீது தடவிக் கொள்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: புஹாரி ஃபழாயிலுல் குர்ஆன், பாபுல் முஅவ்விதத்தைன், முஸ்லிம், பாபு ருகிய்யத்தில் மரீழி ஃபில் முஅவ்விதாத்தி வந்நஃப்ஸ்.
தண்ணீர் ஓதி அடித்தல்:
أن رسول الله عليه وسلم دخل على ثابت بن قيس قال احمد: وهو مريض فقال اكشف البأس رب الناس. عن ثابت بن قيس بن شماس ثم أخذ ترابا من بطحان فخعله في قدح ثم نقث عليه بماء وصب عليه
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் நலம் விசாரிக்கச் சென்றிருந்தனர். அப்போது, அனைவரையும் பரிபாலிக்கும் ரட்சகனே! நோயை குணப்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். பின்னர் மதீனரிலுள்ள பர்ஹானா என்னுமிடத்திலிருந்து சிறிது மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு அதில் தண்ணீரையும் கலந்து ஓதி ஊதிய பின் நோயாளியின் மீது ஊற்றினர் நபிகளார்.
அறிவிப்பாளர்:

No comments:

Post a Comment